சமிக்ஞை சொல்லும் சட்டம்தான்
நாமடங்கும் தொண்டையில் தொடங்கும்
நாதமது வேறெங்கும் போகாது
நேராய் விண்ணை முட்டும்
தடாரம் போலங்கிருந்து கொட்டும்
இதோவென் குரலையும் நிறைத்தது
குவாகுவா வென்றலரும் நானும்
குடமுடைத்து வெளிவந்து வந்தேன்
கண்களை எல்லா திசையிலும்
கொண்டு சென்று கண்டுவந்தேன்
கருவிழி ஒருவழியாய் ஒயும்
கணத்தில் நீரினிப் புகட்ட
களைத்த குரலும் கரைந்தது
எங்கு வந்து சேர்ந்தேன்
தங்கு தடையின்றி பொங்கும்
இங்கா யிங்கா வென்ற
இசையும் திசையில் அசையும்
கண்களு மெச்சில் ஊறும் கைகளை மலரும் வாயிக்
கருகில் கொண்டு சென்று
விழுந்தேனில் வருந்தேன் என்று
அழுது அழுது உழுதேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக