மேக வாகனம் வேகமா போகுதே போகும் வாகனத்தை காணும் கண்கள் அசையாமல் நிற்கிறதே. அங்கே இருவகை மேகம் வரிசை கட்டும்
வெண் மேகம் வந்தால் தெளிந்த வானம் தெரியும்
கரு மேகம் எனில் மழைதனை கடத்தும் இராவணம ஆகும் மேகம்
இதனிடையில் கண் கூசும் மஞ்சள் பெரு வெயில் தந்து கொஞ்சும் கதிரவன் குளுகுளு கேரவனில் புகுந்தது போல புது நிலவாய் பிறப்பெடுத்தால் குழம்பும் மேகம் தான் கடத்தி வந்த கிடுபிடியில் இருந்து தப்பித்த மழைத்தேனோ அது. அது தானா கசிந்துரு கியதோ வென்று மேகமது ஐயம் கொளும் முன்பே கைதான தேனரசியை கை தாங்க தூக்க முடிய வில்லையா என்று ஏளனம் பேசும் வானம் முன்பு கூனி குறுகி நில்லாது அஞ்சலை கொண்டு மிஞ்சும் பஞ்சுதலை மறைய வஞ்சனை தந்து விஞ்சுதலை தாண்டி சென்றது
அது வரை மேக பிடியில் விரவ தாகத்தில் மயங்கிய தேன் துளி விழி திறந்து மழை என விழுந்து தப்பித்தாள். தன் தலைவனை தேடினாள். தன்னைக் காணாது இந்நேரம்
அவன் தலையில் பேரிடி விழுந்திருக்குமே அவன் கால்கள் ஓயாது புவியின் அடி வரை துலாவிக் கொண்டிருக்குமே என்று என்ன செய்வதென்று தெரியாது அந்த தேன் மழையரசி புவி தாள் விழுந்தாள் அங்கிருந்த வானுயர் மலை தாவி அன்பை மட்டும் நிறைத்து வைத்திருந்த அவளின் குளிரும் தன்மை தூள் தூள் ஆனது பின்பு நீள் கொடி என்று மலை முடியும் அடியில் சேர் சேர் என்றும் சல சல வென்றும் கூவி கூவி மண்ணை எழுப்பினாள். எப்பொழுதும் விழித்திருக்கும் மண் துகள்களின் முன் நின்று கேள்விக் கணைகளைக் கண்ணால் காட்டினாள் இரு கரமதன் பத்து விரலும் ஆர் என்று ஆர்ப்பரித்த தன் தலைவனைப் பார் என்று பறை பறைந்தது அவள் நெஞ்சு அவள் உடம்பு காயம் படபட படும்வலி கூட பெரும் வலி எனத் தெரிய வில்லை தலைவனின் வலியை மீளா பெரும் வழியாக துடித்தாள். தன்னைத் தேடி தண்டலைவன் வரும்படி வண்டலை தடயமாய் தந்து விட்டு அடுத்து ஓடிக் கொண்டே இருந்தாள்.