அந்த வீதியில் வீடெலாம் வானை
முந்தி முன்னேறும் முகத்தைத் காண
தொந்தி மனிதரும் வளைந்து நின்று
அந்தி வெயிலை வேடிக்கை பார்ப்பர்
சந்திர நாயகனும் வெட்ட வெளிதனை
நொந்தபடி வெறித்து வெறித்து பார்த்தான்
வெந்து போன உடம்போடு நிற்குலைந்தான்
பந்தி போடும் புல்தரை கொண்ட
சந்திப் பூங்காவில் சிவந்த தன்னெஞ்சால்
சிந்தை தடுமாற சுற்றிச் சுற்றி
வந்தான் பெயருக் குடற்பயிற்சி கொண்டான்
அந்த நேரத்தில் அடங்காத அழகோடு
அருந்து வந்து சென்றவளை கண்டான்
குனிந்த தலையோடு பூமி பார்த்து மெலிந்த இடையொடு நடந்து வந்தாள்
அன்ன நடையில் பைய்ய நடந்தவள் பின்னல் உடைய கூந்தலைக் காட்ட
மின்னலோடு மழையுடன் கூடிய புயலவன்
சின்னஞ்சிறு நெஞ்சை தாக்க தாங்காமல்
முன்னேறி சென்று வழிமறித்து நின்றான்
பின்னால் தடாலென திரும்பி கைநீட்டி
கன்னியவளை நோக்கி முள்ளுமலர் தந்து
தன்னுள் தோன்றிய
காதலை சொல்லி
வானைப் போல நானில்லை கண்ணே
நாணும் நின்னை நிமிர்ந்தே நோக்குவேன் என்று
வானைப் போல நடந்து வந்தவளை
வாளைப் போல நோக்கியவன் சொன்னான்
பொன்னையன் போல பொங்கி நின்று
பெண்ணவளின் பொன்னடிக்கு காத்திருந்தான்
வானவா என்னுள் இல்லாத காதலை தானாய் வந்து சொல்லி நிற்கிறாய்
தேனை சிந்தும் புவிமலர் போல
நானாய் நானிருக்கிறேன் என்னை விட்டுவிடு
வீணாய் தலைகவிழ்ந்து மதுவை ஊற்றாதே
என்றாழ்ந்தாள் வென்ற வாயும் மூடுமலராய்
சென்றோர்ந்தாள் வாள்வீசும் கண்ணுடைய வேந்தே
வானைப் போல வாழ விடுவென்னை
என்றாகிலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன்
என்றன் அருகில் உன்றன் அழகை
குன்ற செய்து நிற்புகழ் இழக்காதே
இன்னும் ஒன்று சொல்லி ஒப்புக்குறேன்
இன்றோடு உன்வாழ்வில் போராட்டம் நின்றாடும் என்றந்தையு முன்னை கருவைத்து என்னை பின்தொடரும் வானவரை வைத்திருப்பார்
அன்றலர்ந்த சூரியனாய் திரிகின்றாய் கவணங்கொள்
காதலித்து வாழ்வை என்னைக்இழக்காதே
உன்னுயிர் உன்னுடலை நீங்கும்படி செய்தால்
உங்காதலை நானெங்கு கொண்டுபோய் என்செய்வேன்
அன்னாந்து பார்ப்பதால் வேறு பூமியை
உன்னால் காண இயலும் ஆனால்
என்னால் தந்தையை நோக்கி வாழ்வேன் அன்றி
எந்நாளும் மற்றவரை தூண்டவு மற்றேன்
உன்னை முன்னைக் கண்டதும் இல்லை
அன்னைக்கு தம்பி போலவும் நீ இல்லை
பின்னை என்செய்வேன் விடைசொல் வீரா
தேனுடைய கோதைநின் காதிலே என்னுடைய
வானுயர காதலை சொன்னேன் ஆனாலும்
வாழ்வு முழுதும் ஒருபோதும்
நானுயரப்
போவ தில்லையென தெளிந்த நீரோடை
போல சொல்லி நிற்கிறாய் பெண்ணே
நீருக்குள் காதல் தெளிவாய் தெரிகிறது
போருக்குள் பொதிந்து கிடக்கும் குருதியும்
பாருக்குள் பதுங்கி கிடக்கும் மதுவும்
பேருக்கு கூட செம்மை யாகாது
மேக குழிக்குப் பின்னிருந்து தாக்கும்
மோகங் கொழிக்கும் பொன்னிற படைனின்று
வேகமெடுத் தென்னை தாக்கினால்
வீழ்வேனென்று
தேவை இல்லாது நினைத்து பயப்படாதே
பூவை உன்னில் காதல் கொண்டதால்
சேவை செய்யும் பாங்கில் உன்னடிமையாம்
நானின்று முதலென்றும் உன்வசம் ஆவேன்
கண்ணசைவில் முடிந்த வரையில்
மோதி பார்ப்பேன் சாதிக்கப் பிறந்தவன்
நீமட்டும் என்னில் தீவைத்திடு ராக்கெட்டை
போல நானொரு கணத்தில் வேகமெடுப்பேன்
பகலவன் பாலவன் எல்லோரும் ஓடி
ஒளிந்து கொள்வர் எங்கேனும் இருட்டில்
தெரிந்திடின் தேடி கண்டு பிடித்து நொறுக்கி விடுவேன் காரணம் உன்மீது
செருக்கோடு நாங்கொண்ட காதல் விடாது
எனக்குள் பயமெனும் எல்லை இல்லை
புயலுக்கு பின்னயனும் சலனம் கொள்வான்
அதுபோல காதல் கொண்டேன் அதனால்
நானும் சும்மா இருக்க மாட்டேன்
மூளைக்குள் பித்து சுரபியும் சும்மா
மூலைக்குள் முடங்கி விடாது கவனம்கொள்
இவ்வளவு சொல்லியும் எதையும் கேளாது
விருட்டென நடையைக் கட்டினாள்
சூரியனின் வேலையாள் நெருப்புக் குதிரையில்
சீர்வாளுடன் வந்தவன் சந்திரன் முகத்தை
மேகச் சுவரில் தோய்த்து இழுத்தபடி
வாகனத்தை வேகமாய் விரட்டி சென்றான்
வாகனவா என்றுவழி மறித்து காற்றும்
விரைந்து தோன்றி குறுக்கிட்டு நின்றது
அரசின் மேக சுவரை சிதிலம்
அடைய செய்தாய் அதனால் அபய
தொகையாய் கையோடு வந்த சந்திரனை
வாகனத்தில் என்று காற்றென்னுள்
ஒப்படைத்து
வெட்ட வெளியில் ஓடிவிடு என்றது
வெட்டியாய் காற்றோடு வந்த தூசியும்
வாகன வில்லென வளைந்து நின்று
தேக பணங்கட்ட சொன்னது பின்பது
வாகன சாவி திருகி எடுத்து
பரிசொடு வாகனத்து வந்தால் நல்லது
பரிசில் தோன்றா திருந்தால் கைதாவாய்
இத்தனையும் காற்றும் தூசும் சொல்ல
பித்தனைப் போல வானான் சூரிய வேலவன்
முகமது சுருங்கியது கரமது துடித்தது
உடம்பது வேலென மருவியது மயங்கரு
நிலையில் தூசுகாற்றை நாணாக்கி
நின்ற
நிலையில் சந்திரனில் பாய்ந்து செந்திரல்
நெஞ்சை தகர்த்து சேந்திரம் முகர்ந்தது
புஞ்சை நிலத்தில் சந்தி சாய்ந்தான்
நீல மெய்திய சூரிய கோளை
தீரா வலியோடு கையில் எடுத்து
சேர நிலத்தில் வீசி எறிந்தான்
சூரர் கூட்டத்தின் பின்னே சீரழகு
சூழ்ந்திரு கன்னியவள் மனதோடி வந்தாள்
வழிதொறும் கல்லும் முள்ளும் கண்முன்
வழியாது கைகால் முழுதும் சிராய்ப்பால்
அலம்பிய குருதியோடு விழுந்த சந்திரனை
கலங்கிய நெஞ்சடியில் தாங்கி சரிந்தாள்
தலைகவிழ்ந்து சந்திரன் முகத்தில் தங்கண்வழி
அழுகுமது ஊற்றி அவங்காவில்
தங்காதல்
மெழுகேற்றி சொல்லாமல் சொல்லி
வழிந்தோடினாள்
அந்த பெண்ணை கண்டு வேலையன்
சிந்தை செய்தான் விந்தையென விளித்தான்
அழுக்கு படிந்த அழுகும் முகத்திலும்
உலுக்கும் காதல் மலருமோ குளிருமோ
சூரிய கடவுளின் மகளும் இதுபோல்
தூரிகை வீட்டில் கண்கலங்கி கொண்டிருப் பாரோ வென்று நெஞ்சோர்ந்தான் வேலையாள்
சந்திரன் சந்தடியில் மெல்லப் பேசினான்
சந்த மிசைக்கும் காற்றே பேசு
அந்த கன்னி கடவுள் மகள்தானே
அந்து போவாளோ வழித்தடம் பிறழ்வாளோ
தம்மகள் மீது தன்னம்பிக்கை இல்லை
என்றால் எம்முயிர் என்செய்யும் சொல்லு
காதலோடு நாணும் முன்பே நானருந்தேனே
மோதி விளையாடும் மேகம் கூடவெண்
முகத்தை கூறு போட்ட தேனோ
பூமி பார்த்து நடந்து வந்தவள்
பொய்யாய் கூட வானை நிமிர்ந்து
பார்க்காது வானை வளறுத்த தேனோ
நீலம் எய்தியது சூரியன் தானே
வானம் என்செய்தது
மேக சுவரில் சாயம் பூசியது
வேற்கதிர் தானே வாகனத்தில் என்றால் வந்து என் செய்வேன்
உலகமே குருடாகும் ஞாயிறு இல்லை என்று கர்வம் கொண்டாள்
சந்தியில் வரும் சந்திரன் என்செய்வான்
பண ஒளி கொண்டதால் சிவப்பும் பொலிவும் அழகென்றால் நான் என் செய்வேன்
பணத்தின் பகட்டு மணத்தின் முகம் காட்டாது
சூரனை போற்றும் தூரிகையே
கடவுளைப் போற்றும் குள்ளர்களே
உங்கள் அறிவு கண் மயங்கியது
உங்கள் அரசி தன்னிலை மறந்தாள்
எங்கதல் அறிநிலை கடந்தாள் வழி தோறும் இடறி விழுந்தாள்
குழி தோறும் உடம்பில் விழுப்புண்
பெற்றாள் பின்பு நல்ல பெற்றம் போல் என்னையும் பெற்றாள்
விண்ணைத் தாண்டியும் என்னைத் தாங்கினாள்
தாங்கியவள் தங்கமாய்ச் சொல்லுகிறாள்
இவற்றை எல்லாம் கேட்டு கொண்டிருந்த
கதிரவன் கண்ணசந்து துணுக்கு குழியில்
விழுந்தவன் விழித்து எழுந்தான்
திடுக்கிட்டான் இதுவரை தான் கண்டது கனவா என திகைத்தான் எழுந்து நின்றான் வானை நோக்கி தலை நிமிர்ந்தான் அங்கு அவன் கண்ட காட்சிகள் சில இடம் பெற்றிருக்க இந்த திகைப்பிலிருந்து மீளாது மயங்கரு நிலையில் அந்த பூங்காவிலிருந்து புறப்பட்டான்